Published : 01 Aug 2014 08:00 AM
Last Updated : 01 Aug 2014 08:00 AM

உத்தராகண்ட்: பேய் மழைக்கு 5 பேர் பலி

உத்தராகண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய்த பேய் மழை காரணமாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து டெரி மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: டெரி மாவட்டம் நேடாடு கிராமத்தில் கனமழை பெய்தது. இதனால் ரூயிஸ் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரம் இருந்த 2 வீடுகள் இடிந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பெண்கள் உட்பட 5 பேரை சடலமாகவும் ஒருவரை பலத்த காயங்களுடனும் மீட்டனர். வேறு யாரேனும் இடிபாடுகளில் சிக்கி உள்ளார்களா என மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x