Published : 29 Aug 2014 10:01 AM
Last Updated : 29 Aug 2014 10:01 AM
உலகம் இருக்கும்வரை பாலி யல் பலாத்கார சம்பவங்கள் நடை பெற்றுக் கொண்டே இருக்கும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீபக் ஹால்டர் கூறியுள்ளார்.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் புதன் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தீபக் ஹால்டர் பேசியதாவது:
பண்டைய காலத்தில் பாலி யல் பலாத்காரங்கள் நடைபெற் றுள்ளன. இப்போதும் அவை தொடர்கின்றன. உலகம் இருக் கும்வரை பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். பலாத்காரம் என்பது ஒரு சமூக நோய். இதனை திரிண மூல் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க வில்லை. இந்தப் பிரச்சினைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ஒருவ ரால் மட்டும் தீர்வு காண முடியாது என்றார்.
இதுகுறித்து காங் கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறும்போது, ‘‘இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்து கள் வெளியிடப்படுவது துர திருஷ்டவசமானது, பெண்கள் பாதுகாப்பில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்’’ என்றார்.
தேசிய மகளிர் ஆணையத் தலைவர் மம்தா சர்மா கூறும்போது, ‘‘மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு பெண். அவரது கட்சியினரே இவ்வாறு பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT