Published : 27 Aug 2014 12:00 AM
Last Updated : 27 Aug 2014 12:00 AM

ம.பி.: அமைச்சர் மகனை ராகிங் செய்த 3 மாணவர்கள் நீக்கம்

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பள்ளியில் பிகார் அமைச்சரின் மகன் ராகிங் செய்யப்பட்டதில் தொடர்புடைய 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

9-ம் வகுப்பு மாணவரான ஆதர்ஷ் சிங், கடந்த 20-ம் தேதி பள்ளி ஹாஸ்டலில் தற்கொலைக்கு முயன்றார். சக மாணவர்கள் ராகிங் செய்ததே அவரது இந்த முடிவுக்கு காரணம் என்று தெரியவந்தது.

இது தொடர்பாக விசாரிக்க பள்ளி நிர்வாகம் ஒரு குழுவை அமைத்தது. இதன் அடிப்படையில் 3 மாணவர்கள், 2 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆதர்ஷ் சிங்கின் தந்தை ஜெய் குமார் சிங் பிகார் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சராவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x