Last Updated : 14 Apr, 2025 08:12 AM

1  

Published : 14 Apr 2025 08:12 AM
Last Updated : 14 Apr 2025 08:12 AM

மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தத்தால் உ.பி.யில் வக்பு சொத்துகளை பதிவு செய்வதில் சிக்கல்

கோப்புப்படம்

புதுடெல்லி: மத்​திய அரசின் புதிய சட்​டத் திருத்​தத்​தால், உத்​தரபிரதேசத்​தில் வக்பு வாரிய சொத்​துகளை பதிவு செய்​வது பெரும் சவாலாகி உள்ளது.

வக்பு சட்​டத் திருத்​தம் நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​று​வதற்கு முன், உ.பி.​யில் ஷியா மற்​றும் சன்னி வக்பு வாரி​யங்​கள் எந்த தலை​யீடும் இல்லாமல் சொத்​துகளை பதிவு செய்ய முடிந்​தது. புதிய சட்​டம் அமலான பிறகு, அதில் குறிப்​பிட்ட விதி​முறை​களை பூர்த்தி செய்​தால் மட்​டுமே அவை வக்பு சொத்​துகளாக பதிவு செய்​யப்​படும். அவற்​றில் முக்​கிய​மாக வக்பு சொத்​துகள் 1952 வரு​வாய் பதிவு​களில் பட்​டியலிடப்பட வேண்​டும்.

மேலும், சொத்தை வழங்​கிய நபரின் பெயரும் அதில் இடம்​பெற வேண்​டும். இதுதொடர்​பாக உ.பி. வக்பு வாரி​யங்​கள் இனி புதிய அறி​விப்​பு​களை வெளி​யிட வேண்​டும்.

இதை செய்து முடித்த பிறகு வக்பு வாரி​யங்​கள் அனுப்​பும் சொத்து ஆவணங்​கள், 1952 வரு​வாய் பதிவு​களில் உள்​ளதா என்று தாலுகா அலு​வலக அதி​காரி​கள் ஆய்வு செய்​வார்​கள். அதன் பிறகு​தான் சொத்​துகள் பதிவு செய்​யப்​படும்.

இதனால், உ.பி. வக்பு வாரி​யங்​கள் தங்​களு​டைய சொத்​துகளுக்கு உரிமை​ கோர மாநில அரசிடம் கடுமை​யாக வாதிடும் நிலை உரு​வாகி உள்​ளது. உ.பி.​யில் ஷியா, சன்னி வக்பு வாரி​யங்​களின் பதிவு​களில் சுமார் 1,32,140 சொத்​துகள் பட்​டியலிடப்​பட்​டுள்​ளன. ஆனால், 2,528 சொத்​துகள் மட்​டுமே மாநில அரசின் வரு​வாய் பதிவு​களில் உள்​ள​தாக மாநில சிறு​பான்மை நலத்​துறை தெரி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில், மீத​முள்ள சொத்​துகளை பதிவு செய்​வது புதிய வக்பு சட்​டத்​தால் மிக​வும் சிக்​கலாகி உள்​ளது. உ.பி.​யில் மசூ​தி​கள், இமாம்​பாடாக்கள் மற்​றும் கல்​லறை​கள் உட்பட பல வக்பு சொத்​துகள் அரசுக்கு சொந்​த​மானவை என்று மாநில அரசு கூறியது சர்ச்​சை​யானது.

முகலாயர், ஆங்கிலேயர்: ஏனெனில், அரசு கூறும் சொத்​துகள் அனைத்​தும் இந்​திய சுதந்​திரத்​துக்கு முன்பு முகலாயர்​கள் மற்​றும் ஆங்கிலேயர்கள் உள்​ளிட்ட முன்​னாள் ஆட்​சி​யாளர்​களால் வழங்​கப்​பட்​ட​வை. இந்த சொத்​துகளில் பலவும் வரலாற்று முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தவை. இதனால், அவற்றை அரசு சொத்​தாக கருத கூடாது என்று உ.பி. வக்பு வாரி​யங்​கள் வாதிடு​கின்​றன.

புதிய சட்​டத்​தின்​படி, வக்பு வாரி​யங்​கள் தங்​களு​டைய முந்​தைய அறி​விப்​பு​களை ரத்து செய்து புதிய சொத்​துகள் பட்​டியலை வெளி​யிட வேண்​டும் என்று கூறப்​பட்​டுள்​ளது. இதில் 1952 பதிவு​களில் உரிமை சரி​பார்ப்பு மற்​றும் அரசு நில​மாக வகைப்​படுத்​தப்​ப​டாதது பெரும் சிக்​கலை ஏற்​படுத்தி உள்​ளது. புதிய சட்​டத்​தின்​படி சொத்து ஆவண பதிவு​களில் தாலுகா நிர்​வாகம் முரண்​பாடு​களை கண்​டறிந்​தாலோ அல்​லது உரிமை கோரல்​கள் புதிய விதி​முறை​களை பூர்த்தி செய்​ய​வில்லை என்​றாலோ நிராகரிக்​கப்​படும் வாய்ப்​பு​கள் உள்​ளன.

இதனால், வக்பு வாரி​யங்​களின் கட்​டுப்​பாட்​டில் உள்ள சொத்​து​களில் கணிச​மாக இழக்க நேரிடும் என்​கின்​றனர். மேலும் வக்பு சொத்​துகள் அரசு சொத்​தாக மாறி​விடும் வாய்ப்​பு​கள் உள்​ளன. இது​போன்ற சிக்​கல்​களால் வக்பு சொத்​துகள் தொடர்​பாக நீதி​மன்​றங்​களில்​ வழக்​கு​கள்​ குவி​யும்​ என்று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x