Last Updated : 07 Apr, 2025 06:30 AM

6  

Published : 07 Apr 2025 06:30 AM
Last Updated : 07 Apr 2025 06:30 AM

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வக்பு சட்ட திருத்தத்தின் பலன் பாஜக.வுக்கு கிடைக்குமா?

புதுடெல்லி: வரும் அக்​டோபர் முதல் 2027 ஏப்​ரல் வரை, பிஹார், மேற்கு வங்​கம், தமிழ்​நாடு, உத்தர பிரதேசம், உத்​த​ராகண்ட், குஜ​ராத் மற்​றும் இமாச்​சல் ஆகிய 7 மாநிலங்​களுக்​கான சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ளது. இச்​சூழலில் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் நிறைவேறிய வக்பு சட்ட திருத்த மசோதா சட்​ட​மாகி உள்​ளது.

இதன் பலன் பாஜக.வுக்கு கிடைக்​குமா என்ற கேள்வி எழுந்​துள்​ளது. தற்​போது திடீரென வக்பு சட்ட திருத்த மசோ​தாவை மத்​தி​யில் உள்ள பாஜக அரசு நிறைவேற்றி விட்​டது. இந்த சட்​டத்​தால் இஸ்​லாமியர்​களுக்கு லாபத்தை விட இழப்பு அதி​கம் எனக் கருதப்​படு​கிறது. எனினும், இது இந்​துமத வாக்​கு​களை ஒன்​றிணைப்​பதுடன், முஸ்​லிம்​களின் சில பிரிவு​கள் மற்​றும் முஸ்​லிம் பெண்​களின் வாக்​கு​கள் பாஜக​வுக்கு கிடைக்​கும் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது.

வரும் அக்​டோபரில் பிஹாரில் நடை​பெற உள்ள தேர்​தலில் இது உண்​மையா என்று தெரிந்து விடும். பிஹாரில் 20 சதவீத முஸ்லிம்கள் உள்​ளனர். இவர்​கள் லாலு தலை​மையி​லான மெகா கூட்​டணி மற்​றும் நிதிஷ்கு​மார் தலை​யி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி என இருதரப்​பிலும் உள்​ளனர்.

இவற்​றில் ஹைதரா​பாத் எம்​.பி. அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யும் பிஹாரின் சீமாஞ்​சல் பகு​தி​யில் சற்று செல்​வாக்​குடன் உள்​ளது. வக்பு சட்​டத்​துக்கு நிதிஷின் ஐக்​கிய ஜனதா தளம் ஆதர​வளித்​த​தால், பிஹார் முஸ்​லிம்​களின் வாக்​கு​கள் அந்த கட்​சிக்கு கிடைக்​குமா என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது.

அடுத்து தமிழ்​நாடு மற்​றும் மேற்கு வங்க மாநிலங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. சுமார் 25 சதவீத முஸ்​லிம்​கள் உள்ள மேற்கு வங்க மாநிலத்​தில் வக்பு சட்​டம் முக்​கிய பங்கு வகிக்க உள்​ளது. பெரும்​பாலான முஸ்​லிம்​கள் முதல்​வர் மம்​தாவுக்கு ஆதர​வளிக்​கின்​றனர். அதே​நேரத்​தில் இந்து வாக்​கு​களால் பாஜக​வுக்​கும் ஆதரவு அதி​கரிக்​கும். இதனால், மம்​தா​வின் திரிண​மூல் கட்​சிக்​கும் பாஜக.வுக்​கும் இடை​யில் கடும் போட்டி இருக்​கும்.

தமிழ்​நாட்​டில் உள்ள சுமார் 9 சதவீத முஸ்​லிம்​களில் திமுக, அதி​முக என இரண்டு கூட்​ட​ணி​களுக்​குமே ஆதரவு தெரிவிக்​கின்​றனர். எனினும், வரும் தேர்​தலில் பாஜக​வுடன் மீண்​டும் கூட்​டணி அமைத்​தால், முஸ்​லிம் வாக்​கு​களை அதி​முக இழக்​கும். அதை உறு​திப்​படுத்​தவே வக்பு சட்​டத்தை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக வழக்கு தொடுக்க தயா​ராகி வரு​கிறது.

வரும் 2027-ம் ஆண்டு உ.பி., உத்​த​ராகண்ட் தேர்​தலிலும் வக்பு சட்​டத்​தால், முஸ்​லிம் வாக்​கு​கள் பாஜகவுக்கு மேலும் குறை​யும் சூழல் உரு​வாகிறது. கடைசி​யாக வரும் குஜ​ராத் மற்​றும் இமாச்​சல் தேர்​தலில் பாஜக மீதான முஸ்​லிம்​களின் நிலைப்​பாடு தொடரும் என்றே கருதப்​படு​கிறது. முத்​தலாக் தடை சட்​டத்தை போலவே பெண்​கள் மற்​றும் ஏழை முஸ்​லிம்​கள் பயனடை​வார்​கள் என்று வக்பு சட்​டம் குறித்து பாஜக கூறிவரு​கிறது. இதனால், முஸ்​லிம் வாக்​காளர்​கள் பிளவுபட​வில்லை என்​றாலும், இந்து வாக்​காளர்​கள்​ பாஜக​வுக்​கு சாதக​மாக இருப்​பார்​கள்​ என்​று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x