Published : 31 Mar 2025 06:24 AM
Last Updated : 31 Mar 2025 06:24 AM

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை 6 மாதம் நீட்டித்தது மத்திய அரசு

புதுடெல்லி: மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கான ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அருணாசல பிரதேசத்தின் திராப், சங்லங், லாங்டிங் மாவட்டங்கள், அதேபோன்று நம்சாய், மகாதேவ்பூருக்கு உட்பட்ட பகுதிகள், அசாம் எல்லையை ஒட்டியுள்ள நம்சாய் மாவட்டத்துக்கு உட்பட்ட சவ்கம் காவல் நிலையங்கள் உள்ளிட்டவை ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் பிரிவு 3-ன் கீழ் பாதிக்கப்பட்ட பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அப்பகுதிகளில் 2025 ஏப்ரல் 1-லிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

நாகாலாந்தைப் பொருத்தவரையில் எட்டு மாவட்டங்கள் மற்றும் 21 காவல் நிலைய வட்டங்கள் மற்றும் இதர 5 மாவட்டங்களுக்கு இந்த சட்டம் அதே கால அளவுக்கு நீட்டிக்கப்படுகிறது.

மேலும், மணிப்பூரில் 13 காவல் நிலைய பகுதிகளை தவிர்த்து அம்மாநிலத்தின் ஏனைய அனைத்து பகுதிகளிலும் ஆயுதப்படை சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎப்எஸ்பிஏ சட்டம் முன் அனுமதியின்றி எந்த இடத்திலும் சோதனை நடத்தவும், யாரையும் கைது செய்யவும், படைப்பிரிவுகளை பயன்படுத்தவும் பாதுகாப்பு படைகளுக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon