Last Updated : 23 Mar, 2025 07:17 AM

 

Published : 23 Mar 2025 07:17 AM
Last Updated : 23 Mar 2025 07:17 AM

மதுரா பாங்கே பிஹாரி கோயில் கிருஷ்ணருக்கு முஸ்லிம்கள் தயாரிக்கும் உடைக்கு தடை விதிக்க நிர்வாகம் மறுப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தின் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்​படும் இடம் மது​ரா. இங்கு புகழ்​பெற்ற கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் உள்​ளது. இதையொட்​டிய நகர​மாக பிருந்​தாவனத்​தில் பழமை​வாய்ந்த பாங்கே பிஹாரி கோயில் உள்​ளது. இங்கு கிருஷ்ணருக்கு அணிவிக்​கும் உடைகளை பல ஆண்​டு​களாக முஸ்​லிம்​கள் தயாரிக்​கின்​றனர்.

இதற்கு தடை விதிக்க வேண்​டும் என்று இந்​துத்​துவா அமைப்​பினர் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இதுகுறித்து கோயில் நிர்​வாகத்​துக்கு ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி முக்தி சங்​கர்ஷ் நியாஸின் தலை​வர் தினேஷ் சர்மா எழு​தி​ய​கடிதத்​தில், ‘‘முஸ்​லிம் கைவினைஞர்​களின் சேவை​களை இந்து கடவுள்​களுக்கு பயன்​படுத்​து​வதை தவிர்க்க வேண்​டும். நம் மதத்​துக்​கான தூய்​மையை கவனிப்​பவர்​களால் மட்​டுமே கிருஷ்ணரின் உடைகள் சுத்​த​மாகத் தயாரிக்​கப்​படு​வதை உறுதி செய்ய முடி​யும்’’ என்று கூறி​யுள்​ளார்.

இது​போல், மேலும் சில இந்​துத்​துவா அமைப்​பு​களும் கடிதம் எழுதி உள்​ளன. அதில், ‘‘முஸ்​லிம்​கள் இறைச்சி சாப்​பிடு​பவர்​கள். இவர்​கள் இந்து மரபு​களை மதிக்​காததுடன் பசு பாது​காப்​பை​யும் கடைபிடிக்​காதவர்​கள். இது​போன்​றவர்​கள் நம் இந்து தெய்​வங்​களின் உடைகளை தயாரிக்க கூடாது’’ என்று தெரி​வித்​துள்​ளனர்.
அத்​துடன் கோரிக்​கையை நிறைவேற்​றா​விட்​டால், போராட்​டங்​கள் நடத்​து​வோம் என்​றும் அவர்​கள் எச்​சரித்​துள்​ளனர். இதற்கு கோயில் தலைமை சேவகர் ஞானேந்​திர கிஷோர் கோஸ்​வாமி அனுப்​பிய பதில் கடிதங்​களில் கூறி​யிருப்​ப​தாவது: கிருஷ்ணருக்கு முஸ்​லிம்​கள் உடை தயாரிப்​ப​தற்கு தடை விதிக்க முடி​யாது. மத வழி​பாடு​களில் நாங்​கள் எந்த குறிப்​பிட்ட சமூகம் மீதும் பாகு​பாடு காட்ட மாட்​டோம். மதத்​தின் அடிப்​படை​யில் கைவினைஞர்​களை மதிப்​பிட முடி​யாது. ஏனெனில், நல்​லொழுக்​கம் உள்​ளவர்​களும், பாவம் கொண்​ட​வர்​களும் ஒரே குடும்​பத்​தில் பிறந்​த​தாக வேதங்​களில் குறிப்​பு​கள் உள்​ளன.

கம்​சன் போன்ற ஒரு பாவி, கிருஷ்ணரின் தாய்​வழி தாத்தா உக்​ரசேனரின் குடும்​பத்​தில் பிறந்​தார். பிரகலாதனின் வடிவத்​தில் ஒரு நாராயண பக்​தர் ஹிரண்ய கஷ்யபு போன்ற ஹரி​யின் எதிரி​யின் வீட்​டில் பிறந்​தார். எனவே, நல்​ல​வர்​களும் கெட்​ட​வர்​களும் எந்த மதத்​தி​லும், பிரி​விலும் அல்​லது குடும்​பத்​தி​லும் காணப்​படலாம்.

மதுரா - பிருந்​தாவனத்​தில் ஏராள​மான முஸ்​லிம் கைவினைஞர்​கள் தாக்​கூர்​ஜி​யின் (கிருஷ்ணர்) கிரீடம் மற்​றும் ஆடைகளை உரு​வாக்​கு​கின்​றனர். இதே​போல, காசி​யில் முஸ்​லிம் குடும்​பங்​கள் சிவபெரு​மானுக்கு ருத்​ராட்ச மாலைகளை உரு​வாக்​கு​கின்​றன. இந்து கடவுள்​களின் உடை, கிரீடம் மற்​றும் அவற்​றில் ஜரி வேலைப்​பாடு​களைச் செய்​யும் திறமை​யான கைவினைஞர்​களில் சுமார் 80 சதவீதம் பேர் முஸ்​லிம்​கள். முகலாயப் பேரரசர் அக்​பர் ஒரு காலத்​தில் கோயிலுடன் தொடர்​புடைய மரி​யாதைக்​குரிய துற​வி​யான சுவாமி ஹரி​தாஸுக்​கு, கிருஷ்ணரை வழிபடு​வதற்​காக வாசனை திர​வி​யத்தை பரிசளித்​தார். இவ்​வாறு அவர் கடிதத்​தில் தெரி​வித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x