Published : 22 Mar 2025 04:58 AM
Last Updated : 22 Mar 2025 04:58 AM

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி

திருமலை: ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தனது பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்​னிட்​டு, நேற்று காலை தனது குடும்​பத்​தா​ருடன் ஏழு​மலை​யான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்​தார்.

இதனை தொடர்ந்​து, பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்​னிட்​டு, திருப்​பதி தேவஸ்​தானத்​தின் எஸ்​வி. அன்​ன​தான அறக்​கட்​டளைக்கு சந்​திர​பாபு நாயுடு ரூ.44 லட்​சத்​திற்​கான காசோலையை தேவஸ்​தான அறங்​காவலர் பிஆர். நாயுடு​விடம் வழங்​கி​னார்.

நேற்று காலை பத்​மாவதி விருந்​தினர் மாளி​கை​யில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் என்​பது பல நூறு ஆண்​டு​களாக இந்து பக்​தர்​களின் உணர்​வு​களோடு பின்னி பிணைந்த ஒரு கோயி​லாகும். என்னை அலிபிரி​யில் நடந்த வெடி குண்டு சம்​பவத்​தி​லும் ஏழு​மலை​யான் தான் காப்​பாற்​றி​னார்.

திரு​மலை​யில் புனித தன்​மையை சீர்​குலைக்​கும் நிகழ்​வு​கள் நடத்த அனு​ம​திக்க மாட்​டோம். அலிபிரி பைபாஸ் சாலை​யில் மும்​தாஜ் ஹோட்​டல் கட்ட வழங்​கப்​பட்ட அனு​மதி ரத்து செய்​யப்​படும். மேலும், இந்​துக்​கள் அல்​லாதவர்​கள் திருப்​பதி தேவஸ்​தானத்​தில் பணி​யாற்ற அனு​மதி இல்​லை. இது இந்​துக்​களின் மனநிலையை பாதிக்​கும் செய​லாகும். 7 மலைகளும் ஏழு​மலை​யானின் சொத்​தாகும். இவ்​வாறு சந்​திர​பாபு நா​யுடு கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x