Last Updated : 21 Mar, 2025 05:19 AM

2  

Published : 21 Mar 2025 05:19 AM
Last Updated : 21 Mar 2025 05:19 AM

அவுரங்கசீப்பை அடுத்து மீண்டும் சர்ச்சை: உ.பி.யில் கஜினி முகமதுவின் உறவினர் சையது சாலார் மசூத் காஜி விழாவுக்கு தடை

புதுடெல்லி: உ.பி.​யின் சம்​பலில் ‘நேஜா’ எனும் பெயரில் ஆண்​டு​தோறும் முஸ்​லிம்​கள் ஒரு விழா நடத்​துகின்​றனர். இந்த விழா​வானது சையது சாலார் மசூத் காஜி என்​பவர் பெயரில் கடந்த 47 ஆண்​டு​களாக நடக்​கிறது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் 25-ல் தொடங்க இருந்த விழாவுக்கு சம்​பல் மாவட்ட காவல் துறை அனு​மதி அளிக்க மறுத்​துள்​ளது. இதற்கு நம் நாட்​டின் மீது படையெடுத்​தவர்​களை​யும், கொள்​ளை​யடித்​தவர்​களை​யும் கொண்​டாட தேவை​யில்​லை” என்று காரணம் கூறி​யுள்​ளது.

கஜ்​னா​வி​யில் இருந்து இந்​தி​யா​வுக்கு படையெடுத்து வந்த முஸ்​லிம் மன்​னர் முகமது கஜினி​யின் சகோ​தரி மகன்​தான் சாலார் மசூத் காஜி. கஜினி​யின் படை தளப​தி​யாக​வும் இருந்​தார். கடந்த 1206-ம் ஆண்டு சோம்​நாத் மீது படையெடுத்து கஜினி முகமது கொள்​ளை​யடித்​த​தாக வரலாற்று பதிவு​கள் உள்​ளன. அப்​போது கஜினி​யுடன் அவரது மரு​மகன் சாலார் மசூதும் இருந்​துள்​ளார்.

பிறகு ஒரு தனிப்​படை​யுடன் தற்​போதைய உ.பி.க்​கும் சாலார் மசூத் வந்​தார். சம்​பலில் ஆட்சி செய்த ராஜபுதன மன்​னனை கொன்​றார். இந்த வெற்​றி​யின் நினை​வாகவே அவரது பெயரில் சம்​பலிலும், அரு​கிலுள்ள முரா​தா​பாத் மற்​றும் சஹரான்​பூரிலும் நேஜா விழா நடத்​தப்​படு​கிறது. பிறகு சாலார் மசூத் நேபாள எல்​லை​யில் உள்ள பைரைச்​சிற்​கும் சென்​றார்.

இன்​றைய உ.பி.​யில் உள்ள பைரைச்​சில் அப்​போது குறுநில மன்​னர் சுஹல்​தேவ் ஆட்சி இருந்​தது. தம்​முடன் மேலும் 21 குறுநில மன்​னர்​களின் படைகளை சேர்த்து சாலார் மசூதை எதிர்​கொண்​டார் சுஹல்​தேவ். கடந்த 1034-ல் நிகழ்ந்த போரில் சுஹல் தேவ் படை​யால் சாலார் மசூத் கொல்​லப்​பட்​டார். அப்​போது பைரைச்​சிலேயே சாலார் மசூத் உடல் அடக்​கம் செய்​யப்​பட்​டது. அந்த கல்​லறை மீது 1250-ல் துக்​ளக் வம்​சத்​தின் நசிரூதீன் மகமூத், தர்கா கட்​டி​னார். தற்​போது, முஸ்​லிம்​கள் இடையே பிரபல​மான சாலார் மசூத் தர்கா​வுக்கு ஆண்​டு​தோறும் உருஸ் எனும் சந்​தனக்​கூடு விழா நடை​பெறுகிறது. இந்த விழாவுக்கு நிரந்தர தடை​வி​திக்க கோரி இந்​துத்​துவா அமைப்​பினர் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்துக்கு கடிதம் எழு​தி​யுள்​ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சஹரான்​பூர் காங்​கிரஸ் எம்​.பி. இம்​ரான் மசூத் கூறும்​போது, “மவுலானா ஹசரத் சாலார் மசூத் ஒரு சூபி புனித​ராக இருந்​தார். இதனால், அவரது பெயரில் நடக்​கும் பாரம்​பரிய விழாக்​களுக்கு அரசி​யல் காரணங்​களுக்​காக தடை விதிக்​கின்​றனர். கடந்த 2023 முதல் நேஜாவை சத்​பவனா விழா​வாக கொண்​டாடினர். இந்த ஆண்​டும் அதே வகை​யில் கொண்​டாட அனு​மதி வழங்​க​வில்​லை” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x