Published : 14 Mar 2025 04:59 AM
Last Updated : 14 Mar 2025 04:59 AM

மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் மீது வழக்கு பதிவு செய்ய மத்திய அரசு ஒப்புதல் 

புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ரேகா குப் தா. ஆம் ஆத்மி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வரிசையில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.1,300 கோடி ஊழல் நடைபெற்றிருப்பது குறித்தும் விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப் பட்டது. இதை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்கி யிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசு பள்ளிகளில் 2,400-க்கும் மேற்பட்ட வகுப் பறைகள் கட்டப்பட்டதில் ரூ.1,300 கோடிக்கும் அதிக மாக ஊழல் நடைபெற்றிருப்பதாக மத்திய ஊழல் கண் காணிப்பு அமைப்பு (சிவிசி) கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x