Last Updated : 20 Feb, 2025 06:07 AM

3  

Published : 20 Feb 2025 06:07 AM
Last Updated : 20 Feb 2025 06:07 AM

பிப்.26-ல் முடியும் மகா கும்பமேளா நீட்டிக்கப்படுமா? - பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் விளக்கம்

புதுடெல்லி: உ.பி.​யின் பிரயாக்​ராஜில் கடந்த ஜனவரி 13 முதல் மகா கும்​பமேளா நடைபெறுகிறது. 144 வருடங்​களுக்கு பிறகு வந்துள்ள​தாகக் கருதப்​படும் இந்த நிகழ்வு, திரிவேணி சங்கமத்​தில் தொடர்​கிறது. இந்த விழா பிப்​ரவரி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேதிகளை நாடு முழு​வ​தி​லும் உள்ள துறவி​களின் சபைகளான 13 அகாடாக்கள் முடிவு செய்​கின்றன. இதில் அரசு தலையிட முடி​யாது.

மகா கும்​பமேளா​வில் நேற்று வரை 54 கோடிக்​கும் அதிக​மானவர்கள் வந்து புனிதக்​குளியலை முடித்​துள்ளனர். மகா கும்​பமேளா​வில் குவி​யும் கூட்டம் குறைவ​தாகத் தெரிய​வில்லை. மகா கும்​பமேளா​விற்கு வருபவர்கள் அதன் அருகிலுள்ள வாராணசி​யின் காசி விஸ்​வநாதர் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயிலுக்​கும் செல்​கின்​றனர். இதன் காரணமாக அந்த இரண்டு நகரங்​களி​லும் கூட கூட்டம் குவி​கிறது.

75 நாட்கள் வரையும்.. இதுகுறித்து உ.பி.யின் முன்​னாள் முதல்​வரான அகிலேஷ், ‘இன்னும் கூட பொது​மக்கள் திரளான எண்ணிக்கை​யில் மகா கும்​பமேளா​வில் புனிதக்​குளியல் முடிக்க விரும்பி அது, அவர்​களால் முடிய​வில்லை. இதற்கு முந்தைய ஆண்டு​களில் 75 நாட்கள் வரையும் கூட கும்​பமேளா நடைபெற்றுள்​ளது. எனவே, மூத்​த குடிகளும் நிம்​ம​தியாக புனிதக்​குளியல் முடிக்க மகா கும்​பமேளா​வின் நாட்களை உ.பி. அரசு நீட்​டிக்க வேண்​டும்’ எனக் கோரி​யிருந்​தார்.

இதையடுத்து, மகா கும்​பமேளா பிப்​ரவரி 26 க்கு பிறகும் நீட்​டிக்​கப்​படும் எனப் புரளிகள் கிளம்​பி​யுள்ளன. சமூகவலை​தளங்​களி​லும் இந்த நீட்​டிப்பு மீதானத் தகவல்கள் பல்வேறு வகையில் பரவி வருகின்றன. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் பிரயாக்​ராஜ் மாநகரக் காவல்​துறை​யின் கூடுதல் ஆணையரும் தமிழருமான டாக்​டர்​ என்​.​கொளஞ்சி கூறும்​போது, ‘பண்​டிதர்​களால் பஞ்சாங்கம் உள்ளிட்ட பல ஆய்விற்கு பின் முடிவானது பிப்​ரவரி 26 மகா சிவராத்ரி நாளுடன் முடிவடைகிறது. எங்கள் முதல்வர் தலைமை​யிலும், நேரடிக் கண்காணிப்​பிலும் பொது​மக்​களுக்கு பிரச்சினை வராமல் அதிகக் கவனம் செலுத்​தப்​படு​கிறது. இத்துடன், மகா கும்​பமேளா​வினால் பிரயாக்​ராஜ் வாசிகளுக்​கும் எந்த இடையூறும் வராதபடி நடவடிக்கைகள் கடை​பிடிக்​கப்​படு​கின்றன.

மகா கும்​பமேளா​ பற்றி பரவும் வதந்​தி​களை​யும் உடனடியாக விசா​ரித்து பொது​மக்​களுக்கு தெளிவுபடுத்து​கிறோம். பிரயாக்​ராஜின் ரயில் நிலை​யங்கள் மூடப்​பட்​ட​தாகக் கூறப்​படுவது தவறு. முன் அறிவிப்​பின்றி இதுபோல் எந்த நடவடிக்கைகளும் எடுக்​கப்​பட​வில்லை. கும்​பமேளா நாட்​களில் நடை​பெற்ற தேர்வை தவற​விட்ட சில ​மாணவர்​களுக்கு அவற்றை எழுத வாய்ப்பு அளிக்​க​வும் அறி​விப்பு வெளி​யாகி உள்​ளது’ எனத் தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x