Last Updated : 19 Feb, 2025 06:10 AM

1  

Published : 19 Feb 2025 06:10 AM
Last Updated : 19 Feb 2025 06:10 AM

உ.பி. நிர்வாகத்தின் முக்கிய உயர் பதவிகளில் தமிழர்கள்: தமிழரான வாராணசி ஐஜி கே.எழிலரசன் சிறப்பு நேர்காணல்

புதுடெல்லி: உத்​தரபிரதேச மாநிலத்​தில் முன்பை விட குற்​றங்கள் குறைந்​திருப்​பதாக வாராணசி​யின் போலீஸ் ஐஜி பதவி​யில் இருக்​கும் தமிழரான கே.எழிலரசன் கூறி​யுள்​ளார். புதுச்​சேரியை சேர்ந்த இவர் தோட்​டக்கலை துறை​யில் முனைவர் பட்டம் பெற்று வாராணசி​யின் மாநகரக் காவல்​துறை​யின் இணை ஆணையராகப் பணியாற்று​பவர், ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டுக்கு அளித்த பேட்டி பின்​வரு​மாறு:

உ.பி. முதல்வர் யோகி ஆதித்​யநாத் தமிழர்களை முக்கியப் பணிகளில் அமர்த்தியிருப்பதாக் கூறப்படுவது உண்மையா?

இது உண்மை​தான். வாராணசி, காசி மற்றும் பனாரஸ் என அழைக்​கப்​படும் இந்த மாநகர நிர்​வாகத்​தில் தமிழர்​களுக்​கும் வாய்ப்​பளித்​து உள்ளனர். இதற்கு எங்கள் பணித்​திறமை​யில் அவர் அதிக நம்பிக்கை வைத்​திருப்பது காரணம். இதை காக்​கும் வகையில் உ.பி.​யின் அதிகாரி​களில் தமிழர்களுக்கு அதிக நேர்​மை​யானவர்கள் என்ற பெயர் உ.பி. வாசிகளிடம் உண்டு.

வாராணசி நகரில் நீங்கள் குற்​றவழக்​கு​களின் நடவடிக்கைகள் தொடர்பாக அணுகும் புதிய நடவடிக்கைகள் பற்றி கூற முடி​யுமா?

நான் வாராணசி​யில் ஒன்றரை வருடங்​களுக்கு முன் பணியமர்ந்​தேன். அதன் பின்னர் இணையதளம் மூலம் அனைத்து காவல்​நிலை​யங்​களை​யும் இணைத்து வைத்​துள்ளேன். இதில், காவல்​நிலைய நடவடிக்கைகளை நான் நேரடி​யாகக் கண்காணிக்​கிறேன். புகார்களை காவல்​நிலை​யத்தில் விசா​ரிக்​கும் முறையை எனது மேஜை முன்பாக உள்ள டி.வி. ஸ்கீரினில் பார்த்து விடு​வேன். இதில், புகார்தர வரும் நபர்​களின் தேவையை பொறுத்து எனது ஜுனியர் அதிகாரி​களான ஏசிபி, டிசிபி போன்ற​வர்​களை​யும் இதன் வாயி​லாகவே அழைத்து கேள்வி எழுப்பு​வதும் நடக்​கிறது. மற்றொன்று புகார் தருபவர்​களுக்கு அதன் அடுத்​தகட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் முறை​யாகக் கிடைப்​ப​தில்லை எனப் பொதுவான புகார் உள்ளது. இதை மறுக்​கும் வகையில், அவர்​களுக்கு எப்ஐஆர், குற்​றப்​ப​திவேட்​டின் நகல் என அனைத்​தும் அளித்து அவர்கள் உரிமை​களைப் பாது​காப்​ப​தில் கவனம் எடுக்​கிறேன். இந்த உத்தர​வுகளை மீறும் காவல்​நிலை​ய அதிகாரிகள் மீது நடவடிக்கைகளும் எடுக்​கப்​பட்​டுள்ளன.

இணையதளம் மூலம் கண்காணிக்​கும் இந்த முறை​யால் பலன் என்ன?

காவல்​நிலை​யத்​தின் விசா​ரணை​யில் குறைகள் இருப்​பின் நேரடியாக அதில் நான் தலையிடும் வாய்ப்பும் உள்ளது. இதை கவனத்​தில் கொண்டு காவல்நிலைய அதிகாரி​களும் மிகவும் பொறுப்புடன் விசா​ரிக்கத் துவங்கி விட்​டனர். இதன் பலனால் சம்பந்​தப்​பட்​ட​வர்களை எனது அலுவலகம் அழைத்து விசா​ரிக்​கும் நேரமும் மீதமாகிறது. நான் இருந்த இடத்​திலிருந்தே தேவையான உத்தர​வு​களை​யும் பிறப்​பிக்​கிறேன். இதுபோல், ஓர் உயர் அதிகாரி​யின் முன்னிலை​யில் வெளிப்​படையான விசாரணை என்ப​தால் புகார்​தரும் பொது​மக்கள் காவல்​நிலையம் வரத் தயங்​கு​வ​தில்லை. எனது நிர்​வாகப் பகுதிவாசிகளுக்கு ஒரு நம்பிக்கை வளர்ந்து விட்​டது. இதுபோன்ற பலனால், உ.பி.​யின் வேறு அதிகாரி​களும் இம்முறையைப் பயன்​படுத்த விரும்பி என்னிடம் ஆலோசனை கேட்​கின்​றனர்.

துறவி​களும், வெளி​மாநிலத்​தவர், வெளி​நாட்​டவர் அதிகம் வரும் புனித நகரமாக இது உள்ளது. இதனால், அவர்களை அணுகும் முறை​யில் உங்கள் காவல்​துறை​யினருக்கு எதுவும் புதிய உத்தர​வுகள் உண்டா?

ஆம். இவர்​களிடம் காவல்​துறை​யினர் தன் மிடுக்கை விட அதிகமாக அன்புட​னும், மரியாதை​யுட​னும் அணுக உத்தர​விடப்​பட்​டுள்​ளது. வெளி​மாநிலத்​தவர் வருகை​யினால்​தான் இந்நகரின் பொருளாதார வளர்ச்சி முக்​கி​யத்துவம் பெறுகிறது. இதன் காரண​மாக​வும் அவர்​களது அணுகு​முறை​யில் அதிக கவனம் மேற்​கொள்​ளப்​படு​கிறது.

மகா கும்​பமேளா​வினால் வாராணசி​யிலும் பெரு​கும் பக்தர்கள் கூட்​டத்தை எப்படி சமாளிக்​கிறீர்​கள்?

இந்தியா முழு​வ​தி​லும் காவல்​துறை​யினருக்கு நெரிசல்களை கட்டுப்​படுத்த ஒரு பொதுவான முறை உள்ளது. ஆனால், இதை தலைமை ஏற்று நடத்​துபவரை பொறுத்து அதன் பலன் மாறு​படு​கிறது. இதுபோன்ற எந்த மாற்​றங்​களும் இல்லாத வகையில் நாம் பணியாற்றி கூட்​டத்தை சமாளித்து வருகிறோம். குறிப்​பாக, விஐபிக்​களானாலும் குறிப்​பிட்ட சாலைகளில் அவர்கள் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்​கப்​படு​வ​தில்லை. இந்த நடவடிக்கை​களில் அரசி​யல்​வா​திகள் உள்ளிட்ட எந்தவித​மானத் தலையீடு​களை​யும் தடுக்​கும் முழுஅதிகாரம் எங்களுக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. பிரச்​சினை​கள், புகார்கள் வரும் இடங்​களில் 10 நிமிடங்​களில் ரோந்து போலீ​ஸார் சென்று சேரும் சூழல் வாராணசி​யில் அதிகம் உள்ளது. இதுபோல், சில உத்தி​களால் தற்போது பிரச்​சினைகள் இல்லை.

உ.பி.​யில் குற்​றங்கள் அதிகம் என்பது போல் செய்திகள் அதிகமாக வருவதன் காரணம் என்ன?

நான் தமிழகத்​தி​லும் அயல்​பணி​யில் பணியாற்றி அச்செய்தி​களைப் படித்​துள்ளேன். இதுபோன்ற செய்தி​களின் கண்ணோட்​டத்​தில் உண்மை இல்லை. மேலும், தமிழகத்தை விட மூன்று மடங்​கு​களுக்​கும் அதிகமான பகுதி​யுடன் 75 மாவட்​டங்கள் உ.பி.யில் அமைந்​துள்ளன. 25-க்​கும் அதிகமான மக்கள்​தொகை கொண்ட மாநிலமாக உ.பி. உள்ளது. இதை நாம் கணக்​கில் வைத்து பார்த்து வேண்​டும். உ.பி.​யின் முந்தைய நிலையை பார்க்​கும்​போது தற்போது குற்​றங்கள் பல மடங்கு குறைந்​துள்ளது. மாஃபியா, கிரிமினல் என குற்றம் செய்​பவர்கள் மீது பாரபட்​சமின்றி நடவடிக்கைகள் எடுக்​கப்​படு​கின்றன.

பெண்​களுக்கு எதிரான குற்​றங்களை தடுப்​ப​தில் அதிக கவனம் செலுத்​தப்​படு​கிறது. இது​போன்ற குற்​றங்களை உ.பி. ​முதல்​வரின் தனிப்​பிரிவு நேரடி​யாகத் தலை​யிட்டு கவனிக்​கிறது. வீடு​கள் அமைந்​துள்ள சில இடங்​களில் குற்​றங்களை தடுப்பது சிரமம். இருப்​பினும், இதன் மீது எடுக்​கும் நட​வடிக்கைகள் ​முக்​கியமாக அமை​கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x