Published : 01 Feb 2025 07:42 AM
Last Updated : 01 Feb 2025 07:42 AM
மகா கும்பமேளாவுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவதைத் தொடர்ந்து பிப்ரவரி 5 வரை கங்கா ஆரத்தி நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி மகாகும்பமேளா தொடங்கியது. இது வரும் 26-ம் தேதி வரை தொடரும். கும்பமேளாவில் இதுவரை 29 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
திரிவேணி சங்கமத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கங்கை படித்துறையில் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் கங்கா ஆரத்தி வரும் 5-ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக கங்கா சேவா நிதி அமைப்பின் தலைவர் சுஷாந்த் மிஸ்ரா நேற்று தெரிவித்தார்.
இதேபோல் ஷீத்லா படித்துறை, அஸ்ஸி படித்துறை உள்ளிட்ட படித்துறைகளிலும் ஆரத்தி நிகழ்ச்சியை வரும் 5-ம் தேதி வரை நிறுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிக அளவில் பக்தர்கள் சேரும்போது கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 28-ம் தேதி அதிகாலை திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment