Published : 17 Dec 2024 01:45 AM
Last Updated : 17 Dec 2024 01:45 AM

சத்தீஸ்கரில் 30 நக்சலைட்கள் சரண்: மத்திய அமைச்சர் அமித் ஷா மகிழ்ச்சி

ஜக்தால்​பூர்: சத்தீஸ்கர் மாநில காவல்​துறை​யின் 25 ஆண்டுகால தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்​பணிப்பை அங்கீகரித்து, நேற்று முன்​தினம் ‘குடியரசுத் தலைவரின் காவல் வண்ண' விருதுகள் வழங்கி கவுரவிக்​கப்​பட்டன. நக்சல்​களுக்கு எதிரான காவல்​துறை​யின் நடவடிக்கை, மாநிலத்​தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவர்கள் மேற்​கொண்ட அயராத முயற்சிகளை அங்கீகரித்து இந்த விருதுகள் வழங்​கப்​பட்டன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜக்தால்​புருக்​குச் சென்று, சரணடைந்த 30 நக்சல்கள் மற்றும் அங்கு வசிக்​கும் மக்களைச் சந்தித்​துப் பேசினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழா​வில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘‘வரும் 2026 மார்ச் மாதத்​துக்​குள் நக்சலைட்டுகளை மாநிலத்​தில் இருந்து ஒழிக்க உறுதி பூண்​டுள்​ளோம். என் வாழ்​வில் இன்று மிகவும் மகிழ்ச்​சியான நாளாகும். சரணடைந்த உங்களை விட, உங்கள் குடும்பத்​தாரை விட நான் இன்று மிகவும் மகிழ்ச்​சியாக இருக்​கிறேன்’’ என்றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x