Published : 21 Oct 2024 08:35 AM
Last Updated : 21 Oct 2024 08:35 AM

பெண்ணின் வயிற்றில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2 கத்தரிக்கோல் அகற்றம்

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் காங்டாக்கிலுள்ள சர் துடோப் நாம்கியால் நினைவு மருத்துவமனையில் (எஸ்டிஎன்எம்) மருத்துவமனையில் அண்மையில் வயிற்றுவலி காரணமாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவரது வயிற்றுப்பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது அதில் 2 கத்தரிக்கோல்கள் இருந்தது தெரியவந்தது.

அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, 12 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2012-ல் இதே எஸ்டிஎன்எம் மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். குடல்வால் அறுவை சிகிச்சையின்போது சிகிச்சை செய்தடாக்டர்கள் மறந்து அந்த கத்தரிக்கோல்களை வயிற்றிலேயே வைத்து தைத்துவிட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து எஸ்டிஎன்எம் மருத்துவமனை டாக்டர்கள் குழு, அந்தபெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சையைநடத்தி வயிற்றிலிருந்த 2 கத்தரிக்கோல்களை அகற்றினர். தற்போது அறுவை சிகிச்சை முடிந்தநிலையில் அந்த பெண் நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடப்பதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x