Published : 19 Oct 2024 04:55 AM
Last Updated : 19 Oct 2024 04:55 AM

வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஆந்திராவில் 7 பேர் உயிரிழப்பு

விஜயநகரம்: ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், குர்லா பகுதியில் அண்மையில் தீவிர வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் குர்லா அரசு மருத்துவமனையில் 28 பேர், சீபுரபல்லி அரசு மருத்துவமனையில் 9 பேர், விஜயநகரம் அரசு மருத்துவமனையில் 20 பேர், விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் 5 பேர் என அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில் மாநில சுகாதார அமைச்சர் கொண்டபல்லி நிவாஸ், இயக்குநர் பத்மாவதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x