Last Updated : 15 Oct, 2024 05:29 AM

7  

Published : 15 Oct 2024 05:29 AM
Last Updated : 15 Oct 2024 05:29 AM

கவுரி லங்கேஷ் கொலையில் ஜாமீனில் வந்தவர்களுக்கு விழா: இந்துத்துவ அமைப்பு நடத்தியது

பெங்களூரு: பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் வழக்கில் ஜாமீனில்வெளியே வந்தவர்களுக்கு இந்துத்துவ அமைப்பினர் பாராட்டு விழா நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55) கடந்த 2017-ம் ஆண்டு செப். 5-ம் தேதி வீட்டின் அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 7 ஆண்டுகளாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த 9-ம்தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பரசுராம் வக்மோர், மனோகர்யாதவ் உள்ளிட்ட 6 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 6 பேரும் கடந்த 11-ம் தேதி மாலை சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுராவுக்கு சென்ற 6 பேரும் ச‌த்ரபதி சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்தனர். அங்கு குவிந்திருந்த இந்துத்துவ அமைப்பினர் 6 பேருக்கும் காவி சால்வை, மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் ‘ஜெய் சனாதன் தர்மா' எனவும் ‘பாரத் மாதாகி ஜே' எனவும் முழக்கம் எழுப்பினர்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஹனுமன் சேனா அமைப்பின் சார்பில் 6 பேருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. அவர்களுக்கு சால்வை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இது தொடர்பான‌ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x