Published : 09 Oct 2024 08:36 AM
Last Updated : 09 Oct 2024 08:36 AM

லாவோஸ் நாட்டில் பிரதமர் 2 நாள் சுற்றுப்பயணம்: ஆசியான் இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

புதுடெல்லி: மத்திய வெளியுறவு அமைச்சகம்நேற்று வெளியிட்ட அறிக்கை: 21-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19-வது கிழக்கு ஆசியா மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிவரும் 10, 11-ம் தேதிகளில் லாவோஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தலைநகர் வியான்டியனில் அந்நாட்டின் பிரதமர் சோனெக்சே சிபாண்டோனை சந்தித்து இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளார்.

கூட்டாண்மை விரிவாக்கம் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பின் திசையை உறுதி செய்வதன் மூலம் இந்தியா-ஆசியான் உறவுகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து ஆசியான் - இந்தியா மாநாட்டில் மதிப்பாய்வு செய்யப்படும். நமதுபிராந்திய முக்கியத்துவம் வாய்ந்தபிரச்சினைகளில் தலைவர்களிடையே உள்ள கருத்து பரிமாற்றத்துக்கான வாய்ப்பை கிழக்கு ஆசியா உச்சி மாநாடு வழங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x