Published : 08 Oct 2024 07:37 AM
Last Updated : 08 Oct 2024 07:37 AM

நாக்பூர் ரயில் நிலையத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட இரு பயணிகள் கொலை

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர்ரயில் நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரின் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 2 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

நாக்பூர் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் நேற்று அதிகாலையில் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த 6-7 பயணிகளை மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் கான்கிரீட் சிலாப் மூலம் தாக்கினார். அவர்களின் அலறல் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். தப்பிக்க முயன்ற மன நோயாளியை சுற்றி வளைத்து பிடித்தனர்.

எனினும் இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த கணேஷ் குமார் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றொருவர் வீடற்ற நபர் என தெரியவந்துள்ளது.படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் 45 வயதுடைய கொலையாளி மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாக்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x