Published : 22 Sep 2024 07:41 AM
Last Updated : 22 Sep 2024 07:41 AM

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

கோப்புப்படம்

லக்னோ: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை, கொலைகாரர் என்று அவர் விமர்சித்தார்.

இதுதொடர்பாக உத்தர பிரதேச பாஜக மூத்த தலைவர் விஜய் மிஸ்ரா, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். சுல்தான்பூரில் உள்ள எம்பி,எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரிக்கப்பட இருந்தது. அங்குள்ள பார் கவுன்சில் சார்பில் நேற்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் அனைவரும் பங்கேற்றதால் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x