Published : 06 Sep 2024 05:39 AM
Last Updated : 06 Sep 2024 05:39 AM

ராஜஸ்தான் டெய்லர் கன்னையா லால் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஜாமீன்

ஜெய்ப்பூர்: பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபர் சர்மா, 2022-ம் ஆண்டுஜூன் மாதம் முகம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தார்.

இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்த டெய்லர் கன்னையா லால், நுபர் சர்மாவின் கருத்தை ஆதரித்து பதிவுகள் இட்டுவந்தார். இந்நிலையில், 2022 ஜூன் 28-ம்தேதி அவர் கொலைசெய்யப் பட்டார். இந்த வழக்கில் முகம்மது ரியாஸ் மற்றும் முகம்மது கவுஸ் ஆகியோருடன் கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக முகம்மது ஜாவித் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி ராஜஸ்தான் நீதிமன்றம் நேற்று முகம்மது ஜாவித்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x