Published : 05 Aug 2024 05:41 AM
Last Updated : 05 Aug 2024 05:41 AM

2029 தேர்தலுக்கு பிறகும் பாஜக.தான் ஆட்சி அமைக்கும்: அமித்ஷா நம்பிக்கை

புதுடெல்லி: அடுத்த மக்களவை தேர்தலிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா தலைநகர் சண்டிகரில் 'நியாய் சேது' நீர் விநியோக திட்ட தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கலந்து கொண்டு பேசியதாவது:

காங்கிரஸ் கடந்த 3 தேர்தல்களில் வென்ற இடங்களைவிட இந்தத் தேர்தலில் அதிக இடங்களை பாஜக வென்றுள்ளது என்பதை எதிர்க்கட்சிகள் அறியவில்லை. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நீடிக்காது என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். நாட்டில் ஸ்திரத் தன்மை இருக்கக் கூடாது என்று அவர்கள் விரும்புகின்றனர்.

அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். 2029-ல் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும். பிரதமர் மோடி தலைமையில்தான் அமையும். ஆட்சி எதிர்க்கட்சிகள் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து முறையாக செயல்பட கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x