Published : 26 Jul 2024 05:17 AM
Last Updated : 26 Jul 2024 05:17 AM

அவதூறு வழக்கில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜர்

சுல்தான்பூர்: அவதூறு வழக்கில் உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட தலைவர் அபிஷேக் சிங் ரானா கூறும்போது, “ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு லக்னோ விமான நிலையம் வந்து இறங்குகிறார். பிறகு அவர் சுல்தான்பூர் புறப்பட்டு செல்கிறார்” என்றார்.

கடந்த 2018-ல் அப்போதைய பாஜக தலைவரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை ராகுல் கூறியிருந்தார். இது தொடர்பாக உள்ளூர் பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா கடந்த 2018 ஆகஸ்ட் 4-ம் தேதி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் ஜூலை 26-ம் தேதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க ராகுல் காந்திக்கு சிறப்பு நீதிபதி சுபம் வர்மா உத்தரவிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x