Published : 25 Jul 2024 05:34 AM
Last Updated : 25 Jul 2024 05:34 AM

ராஜஸ்தானில் பசுக்களை கடத்தியவர் சுட்டுக் கொலை

கோப்புப் படம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் மீனா நேற்று கூறிய தாவது: அதிகாலை 2 மணி அளவில் பசுக்களை கடத்திச் சென்ற வேனை போலீஸார் துரத்திச் சென்றனர். அப்போது அந்த வேனில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனிடையே, சிறிது தூரத்தில் பசுக்களை கடத்திச் சென்றவேறு கும்பலைச் சேர்ந்த 2 பேர் வேனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் வேன் ஓட்டுநர் சந்தீப் உயிரிழந்தார். பின்னர் அந்த வேனில் இருந்த நரேஷை கைது செய்துவிசாரணை நடத்தி வருகிறோம். வேனில் இருந்த 2 பசுக்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற 2 கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x