Last Updated : 04 Jul, 2024 06:06 AM

 

Published : 04 Jul 2024 06:06 AM
Last Updated : 04 Jul 2024 06:06 AM

தன் பாலின சேர்க்கை வழக்கில் சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு ஜூலை 18 வரை காவல்

சூரஜ் ரேவண்ணா

பெங்களூரு: கர்நாடகாவில் முன்னாள் பிரதமர்தேவகவுடாவின் பேரனும் ஹாசன் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் அண்ணனும் மஜத எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா (36) மீது மஜதவை சேர்ந்த 2 இளைஞர்கள் தன்பாலின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஹொலெநர்சிப்புரா போலீஸார் அவரை கைது செய்தனர்.

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கைவிசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினரே இவரிடமும் விசாரணைநடத்தினர். சூரஜ் ரேவண்ணாவின் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, 42-வது பெருநகர கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது போலீஸார் தரப்பில் மேலும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஜூலை 18-ம் தேதிவரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

இதையடுத்து சூரஜ் ரேவண்ணா பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதேசிறையில்தான் பிரஜ்வல் ரேவண்ணா, கொலை வழக்கில்கைதான நடிகர் தர்ஷன் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x