Published : 19 Aug 2014 11:01 AM
Last Updated : 19 Aug 2014 11:01 AM

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் காயம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் உடனான சண்டையின்போது, துணை ராணுவப் படையின் கோப்ரா பிரிவைச் சேர்ந்த 3 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தின் வனப்பகுதியில் நடத்தப்பட்ட நக்சல் வேட்டையின்போது, நக்சல் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் துணை ராணுவ படையின் கோப்ரா பிரிவைச் சேர்ந்த 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், மீட்புப் படையினர் அங்கு விரைந்து காயமடைந்த வீரர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கு கோப்ரா பிரிவு வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியபோது, வனப்பகுதிக்குள் சென்று நக்சல்கள் பதுங்கினர். இதனால், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x