Published : 17 Aug 2014 11:56 AM
Last Updated : 17 Aug 2014 11:56 AM
கேரள மாநிலம் கொல்லத்தில் டி.கே.எம். சென்டினரி பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியின் நிர்வாகிகள் கூறியதாவது:
சுதந்திர தினத்தன்று, பள்ளியில் ‘வந்தே மாதரம்' பாடலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ‘சோஷி யல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா' (எஸ்.டி.பி.ஐ) என்ற அடிப் படைவாத அமைப்பு கடிதம் எழுதி யிருந்தது. அவ்வாறு செய்யாவிட் டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்தக் கடிதத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனால் ‘வந்தே மாதரம்' பாடலை பாடத் தடைவிதித்தோம் என்றும் அந்தப் பள்ளி கூறியது.
இதற்கு பல்வேறு கட்சிகளின் இளைஞர் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஆனால் இது குறித்து தங்களிடம் எந்தப் புகாரும் வரவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT