Published : 24 May 2024 09:41 AM
Last Updated : 24 May 2024 09:41 AM

‘பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்’ - மேற்கு வங்க ஆளுநர் மீது புகார்

திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு புகார் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தனது அலுவலகத்தைப் பயன்படுத்துகிறார்.

குறிப்பாக, கடந்த ஜனவரி 23-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ராமர் கோயிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர், பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் அக்கட்சியின் சின்னத்தை தனது மார்பில் பொருத்தி இருந்தார்.

ஆளுநரின் இந்த செயல் ஜனநாயக விரோதமானது மட்டுமல்லாமல், அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும். மேலும் இது நியாயமான, சுதந்திரமான தேர்தலையும் பாதிக்கும்.எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x