Published : 16 Aug 2014 01:08 PM
Last Updated : 16 Aug 2014 01:08 PM

உத்தராகண்ட் நிலச்சரிவு பலி 24-ஆக அதிகரிப்பு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

உத்தராகண்டில் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகள் மண்ணில் புதைந்தன. இச் சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் பலியாகினர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் வியாழன் இரவு பெய்யத் தொடங்கிய கனமழை தொடர்கிறது. இதன் காரணமாக, யம்கேஷ்வர் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன. இதில் 12 பேர் பலியாயினர். மேலும் 5 பேர் கல்ஜிகல் மற்றும் த்வரிகல் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பலியாயினர். இந்நிலையில், இன்று அதிகாலை டேராடூனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்:

உத்தராகண்டில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x