Published : 26 Aug 2014 01:00 PM
Last Updated : 26 Aug 2014 01:00 PM

மோடி அலையை மட்டுமே நம்புவதில் பலனில்லை: உத்தவ் தாக்கரே கருத்து

பிஹார் மற்றும் கர்நாடக இடைத்தேர்தல்கள், மோடி அலையை நம்பி மட்டுமே வெற்றி காண முடியாது என்று பாடம் புகட்டி உள்ளதாக சிவ சேனை குறிப்பிட்டுள்ளது.

மாநில இடைத்தேர்தல்களில் பாஜக பெரும் பின்னடைவு கண்டுள்ளதை குறிப்பிட்டு பாஜக-வின் கூட்டணி கட்சியான சிவ சேனை இன்று தனது அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "நாட்டிற்கு வளர்ச்சி வேண்டும், அதற்காக ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்று எண்ணிய மக்கள், மோடி மீது நம்பிக்கை வைத்து மக்களவைத் தேர்தலில் நம்மை வெற்றியடைய செய்தனர்.

ஆனால், 'மோடி அலை' என்ற ஒன்றை நம்பி மட்டுமே, அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. மாநிலத்தில் நடக்கும் தேர்தலிலும் 'மோடி அலை'யை மட்டுமே நம்ப கூடாது என்பதை பிஹார் மற்றும் கர்நாடக இடைத் தேர்தல் உணர்த்திவிட்டன.

மாநில தேர்தல்களை மக்களவைத் தேர்தலோடு என்றுமே ஒப்பிடக்கூடாது.

பிஹார், கர்நாடக தேர்தல் குறித்து நாம் அனைவரும் ஆராய வேண்டும். மகாராஷ்டிர மக்களும் மாற்றத்தை விரும்புகின்றனர். ஆனால் இங்கு 'மோடி அலை'யை கொண்டு மட்டுமே வெற்றியடைய முடியாது" என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x