Published : 20 Jan 2024 05:55 PM
Last Updated : 20 Jan 2024 05:55 PM
ஸ்ரீரங்கம், ராமேசுவரம் கோயில்களில் பிரதமர் மோடி தரிசனம்: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார். மேலும், பல்வேறு ஆன்மிக தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.
அந்த வகையில் தமிழகத்துக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார். ஆண்டாள் யானை பிரதமருக்கு மவுத் ஆர்கன் வாசித்துக் காண்பித்தது. தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் அமர்ந்து ராமாயண பாராயணத்தைக் கேட்டார். பின்னர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அக்னி தீர்த்த கடலில் பிரதமர் புனித நீராடினார். திருச்சியிலும் ராமேசுவரத்திலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment