Published : 11 Jan 2024 07:08 AM
Last Updated : 11 Jan 2024 07:08 AM

சார்மினார் ரயில் விபத்து: 10 பயணிகள் காயம்

ஹைதராபாத்: சென்னை - ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன் தினம் மாலை வழக்கம்போல் 5.10 மணிக்கு தாம்பரத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது.

இது நேற்று காலை 8 மணிக்கு ஹைதராபாத் நாம்பல்லி ரயில் நிலையத்துக்கு வந்தபோது, பயணிகள் இறங்க தயாராக இருந்தனர்.ரயில் 5-வது பிளாட்பாரத்தில் வந்த போது, பிளாட்பாரத்தில் நிற்காமல் கடைசியாக இருந்த தடுப்பு சுவர்மீது மோதி நின்றது. இதில் எஸ்-2,எஸ்-3, எஸ்-6 ஆகிய பெட்டிகளில் நின்று கொண்டிருந்த பயணிகள் நிற்க முடியாமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்து காயமடைந்தனர்.

இதில் 10 பயணிகள் லேசான காயமடைந்தனர். 6 பேர் லாலாகூடா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த விபத்துக்கு ரயில் பைலட்டின் அலட்சியமே காரணம் என்று ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x