Published : 08 Jan 2024 06:55 AM
Last Updated : 08 Jan 2024 06:55 AM

24 மணி நேரத்தில் 756 பேருக்கு கரோனா

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 756 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களையும் சேர்த்து தற்போது 4,049 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், 24 மணி நேரத்தில் 5 பேர் தொற்றால் இறந்துள்ளனர். கேரளா, மகாராஷ்டிராவில் தலா 2 பேர், காஷ்மீர் ஒருவர் இறந்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க இதுவரை 220.67 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x