Published : 05 Jan 2024 07:05 AM
Last Updated : 05 Jan 2024 07:05 AM

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 760 பேருக்கு கரோனா தொற்று உறுதி

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 760 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,423-ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

டிசம்பர் 5 வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் மட்டுமே இருந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பு தொடங்கிய 2020-ம் ஆண்டின் முற்பகுதியில் தினசரி பாதிப்பு லட்சங்களில் இருந்தது. இதனால், கடந்த நான்கு ஆண்டுகளில் 4.5 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 5.3 லட்சம் பேர் உயிரிழந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x