Published : 28 Dec 2023 07:34 AM
Last Updated : 28 Dec 2023 07:34 AM

திருப்பதியில் சர்வ தரிசன டிக்கெட் இல்லாமல் பக்தர்கள் ஏமாற்றம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆன்லைனில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும், வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு விட்டன. மேலும், சுமார் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்களும் ஜனவரி 1-ம் தேதி வரைக்கும் வழங்கப்பட்டு விட்டன.

ஆதலால், ஜனவரி 1-ம் தேதி வரை பக்தர்கள் திருப்பதி வர வேண்டாமென அறிவிக்கப்பட்டது. இதனை அறியாத ஏராளமான பக்தர்கள், தர்ம தரிசனம் செய்யலாம் என்ற எண்ணத்தில் திருப்பதி வருகின்றனர். ஆனால் அவர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x