Published : 11 Nov 2023 07:11 AM
Last Updated : 11 Nov 2023 07:11 AM

தெலங்கானாவில் வேட்பு மனு தாக்கல் நிறைவு

கோப்புப்படம்

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்நடைபெற உள்ளது. இங்கு ஆளும் கட்சியான பிஆர்எஸ்,எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்,பாஜக ஆகிய 3 கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி இங்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

வரும் 13-ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x