Published : 14 Oct 2023 05:25 AM
Last Updated : 14 Oct 2023 05:25 AM

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் நாளை கோலாகலமாக தொடக்கம்

கோப்புப்படம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை 15-ம் தேதி இரவு கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடத்தப்படுகிறது. இதில் ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைவருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல், நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு கோலாகலமாக நடத்தப்பட உள்ளது.

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, இன்று ஏழுமலையான் கோயிலில் அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் வைகானச ஆகம விதிகளின்படி நடத்தப்பட உள்ளது. மாலை விஸ்வகேசவர் என்றழைக்கப்படும் ஏழுமலையானின் சேனாதிபதி 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பிரம்மோற்சவ ஏற்பாடுகளை பார்வையிடுவார்.

அதன் பின்னர், நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இதனை தொடர்ந்து வரும் 22-ம் தேதி வரை காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெற உள்ளன. 23-ம் தேதி காலை 6 மணிக்கு சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x