Published : 04 Oct 2023 07:16 AM
Last Updated : 04 Oct 2023 07:16 AM

திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னை குழந்தை 10 மணி நேரத்தில் மீட்பு

திருப்பதி: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தனது மனைவி மீனா, 8 மற்றும் 2 வயது குழந்தைகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்தார்.

தரிசனம் முடிந்த பின்னர், திங்கட்கிழமை நள்ளிரவு திருப்பதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். சில நிமிடங்கள் கழித்து தாய் மீனா கண் விழித்து பார்த்த போது 2 வயது குழந்தையைக் காணவில்லை.

இதுகுறித்து திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையத்தில்் புகார் செய்தனர். உடனடியாக திருப்பதி எஸ்பி பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின் பேரில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு சிறுவனை தேடினர்.

திருப்பதி -காளஹஸ்தி நெடுஞ்சாலையில் உள்ள மாதவமால கிராமத்தில் வசிக்கும் தனம்மாள் என்பவரிடம் குழந்தை இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை 10 மணி நேரத்தில் மீட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x