Published : 28 Sep 2023 05:46 AM
Last Updated : 28 Sep 2023 05:46 AM

சனாதன பேச்சு சர்ச்சை: பிஹாரில் விஎச்பி பேரணி; போலீஸ் விடுமுறை ரத்து

பாட்னா: தமிழகத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்து மதத்தின் மீதான தாக்குதலை தடுக்கவும், சனாதனத்தை காப்பாற்றவும் விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்புகள் வட மாநிலங்களில் ஷவுர்ய ஜாக்ரண் யாத்திரையை நடத்த உள்ளன.

அடுத்த 2 வாரங்களுக்கு பிஹாரின் வெவ்வேறு நகரங்களில் இந்த யாத்திரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் பிஹார் மாநில கூடுதல் போலீஸ் டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) அலுவலகத்திலிருந்து அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. செப்டம்பர் 28 (இன்று) முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை விடுமுறையில் உள்ள அனைவரும் பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x