Published : 27 Sep 2023 05:44 PM
Last Updated : 27 Sep 2023 05:44 PM

ப்ரீமியம்
மணிப்பூர் நிலவரம் முதல் என்ஐஏ சோதனை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ செப்.27, 2023

‘அடுத்த 2 ஆண்டுகளில் அரசுப் பணிகளுக்கு 50,000 பேர் தேர்வு’: "கடந்த இரண்டு ஆண்டு காலத்தில், 12,576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10,205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நடப்பாண்டில், மேலும் 17,000 பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்பட உள்ளது . அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்" என்று டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: கே.எஸ்.அழகிரி: “காவிரி விவகாரத்தை கர்நாடக பாஜக அரசியலாக்கும் முயற்சியில் இரண்டு மாநில மக்களுக்கிடையே வன்மத்தையும், வன்முறையையும் தூண்டிவிட முயற்சிக்கிறது. செவ்வாய்க்கிழமை போராட்டத்தின்போது, தமிழக முதல்வர் படத்துக்கு அவமரியாதை செய்தவர்கள் மீது கர்நாடக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x