Published : 09 Sep 2023 05:45 PM
Last Updated : 09 Sep 2023 05:45 PM
டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதாக பிரதமர் அறிவிப்பு: டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, டெல்லி ஜி20 பிரகடனம் அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளதாக மாநாட்டின் தலைவரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேசையை ஹம்மர் கருவியைக் கொண்டு தட்டி அவர் இதை அறிவித்தார். அப்போது, அருகில் இருந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட அரங்கில் உள்ள தலைவர்கள் கைகளைத் தட்டி வரவேற்றனர்.
இந்தப் பிரகடனத்தில் உலகின் தெற்கின் வளர்ச்சிக்கான இந்தியாவின் முன்னுரிமைகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதாகவும், இதற்கு மற்ற நாடுகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேற்கு உலகம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட தெற்கு உலகின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளை பிரதமர் மோடி தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT