Published : 06 Sep 2023 05:47 PM
Last Updated : 06 Sep 2023 05:47 PM
உதயநிதி சனாதன சர்ச்சை - பிரதமர் மோடி ரியாக்ஷன்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்துக்கு ‘உரிய பதில்’ அளிப்பது அவசியம் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் கூட்டம் புதன்கிழமை நடந்தது. அதில்தான் சனாதன சர்ச்சை குறித்து பிரதமர் மோடி முதல்முறையாக பேசியுள்ளார். மத்திய அமைச்சர்களிடம் அவர் கூறுகையில், "இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்; எனினும், வரலாறு பற்றி யாரும் பேச வேண்டாம். அரசியலமைப்பை ஒட்டிய உண்மைகளில் உறுதியாக இருங்கள். இது குறித்த தற்காலச் சூழல்கள் குறித்து பேசுங்கள்” என்றார். அதேநேரத்தில், “இந்தியா - பாரத் சர்ச்சை குறித்து யாரும் பேச வேண்டாம். இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் பேச வேண்டும்" என்று அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment