Last Updated : 21 Jul, 2023 08:41 AM

1  

Published : 21 Jul 2023 08:41 AM
Last Updated : 21 Jul 2023 08:41 AM

பரந்தூர் விமானநிலைய திட்ட நடவடிக்கைகள் என்ன?- திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் கேள்வி

புதுடெல்லி: பரந்தூர் விமானநிலையத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து மக்களவையில் நேற்று திமுக எம்.பி கதிர் ஆனந்த் கேள்வி எழுப்ப மத்திய இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

இது குறித்து வேலூர் தொகுதி எம்.பி.,யான கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்வியில், ‘தமிழ்நாட்டில் உள்ள பரந்தூரில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்த தேவையான ரூ.61,000 கோடி நிதியை நிதியுதவி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதா?

அப்படியானால், அதன் விவரங்கள் யாவை? கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்தை நிறுவுவதற்கான நிலத் தேவைகளை அரசாங்கம் இறுதி செய்துள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் யாவை?

தமிழ்நாட்டில் உள்ள பாரந்தூரில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்கு அரசு எடுத்துள்ள சீரிய நடவடிக்கை விவரங்கள்; சென்னை விமான நிலையத்தில் விமானங்கள், பயணிகள் மற்றும் சரக்குகளை கையாளும் திறனை அதிகரிக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

வேலூர் விமான நிலைய கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கவும், விமான சேவை நடவடிக்கைகளை தொடங்கவும் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?’ எனக் கேட்டிருந்தார்.

இக்கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் டாக்டர் வி.கே. சிங் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு உருவாக்கிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் (ஜிஎப்ஏ) கொள்கை 2008 இல், நாட்டில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை மற்றும் நிபந்தனைகளை பரிந்துரைக்கிறது.

இக் கொள்கையின்படி, திட்டத்துக்கான நிதியுதவி, நிலம் கையகப்படுத்துதல், ஆர் மற்றும் ஆர் போன்ற விமான நிலைய திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசு திட்ட ஆதரவாளராக இருந்தால். அந்தந்த மாநில அரசு உட்பட சம்பந்தப்பட்ட விமான நிலைய மேம்பாட்டாளரிடம் உள்ளது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் உள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான முதல் கட்ட அனுமதியான 'சைட்-கிளியரன்ஸ்' வழங்குவதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் (MOCA) சமர்ப்பித்துள்ளது.

தமிழ்நாடு. கிரீன்ஃபீல்ட் விமான நிலைய கொள்கையின்படி, இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஅஇ), சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) மற்றும் பாதுகாப்பு அமைச்சகம்(எம்ஓடி) ஆகியோரின் கருத்துகளுக்காக முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

பங்குதாரர்களுடனான இந்த ஆலோசனையை முடித்தப் பிறகு, கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழுவின்முன், தள அனுமதி வழங்குவது தொடர்பாக அவர்களின் பரிந்துரைக்காக முன்மொழிவு வைக்கப்பட வேண்டும். சென்னை விமான நிலையம் உட்பட விமான நிலையங்களில் உள்கட்டமைப்புகள்/வசதிகளை மேம்படுத்துவது என்பது ஒரு தொடர்ச்சியான செயலாகும், இது ஏஅஇ அல்லது சம்பந்தப்பட்ட விமான நிலைய ஆபரேட்டர்களால் செயல்பாட்டுத் தேவைகள், போக்குவரத்து தேவை, வணிக சாத்தியம் போன்றவற்றைப் பொறுத்து மேற்கொள்ளப்படுகிறது. ஏஅஇ ஆனது சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த இரண்டு கட்டங்களில் செய்கிறது. முதல் கட்டத்தின் கீழ், ஒரு புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் தற்போதுள்ள ஆண்டொன்றுக்கு 23 மில்லியன் பயணிகளிலிருந்து ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளுக்கு உயர்த்தி பயணிகளைக் கையாளும் திறனை மேம்படுத்தி செயல்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்துக்கான கட்டுமானப் பணிகளும் ஜூலை, 2025க்குள் முடிவடைய வாய்ப்புள்ளது. இரண்டாம் கட்டப் பணிகள் முடிந்த பிறகு, விமான நிலையம் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும். ஆண்டுக்கு 1.7 மில்லியன் மெட்ரிக் டன் கையாளும் திறன் கொண்ட, நவீன போதுமான விமான சரக்கு கையாளும் வசதி சென்னை விமான நிலையத்தில் உள்ளது.

நாட்டில் உள்ள சேவை இல்லாத மற்றும் குறைந்த விமான நிலையங்களில் இருந்து பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்தவும், மக்களுக்கு மலிவு விலையில் விமானப் பயணத்தை மேற்கொள்ளவும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், கடந்த அக்டோபர் 21, 2016 இல் உடான் எனும் பிராந்திய இணைப்புத் திட்டம் தொடங்கியுள்ளது. . உடான் திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்குவதற்கான தரம் உயர்த்துவதற்காக வேலூர் விமான நிலையம் வழங்கப்பட்டது. விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முன்கூட்டியே முடிவடைந்து, விமான நிலையத்திற்கு உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x