Published : 07 Jul 2023 05:41 AM
Last Updated : 07 Jul 2023 05:41 AM

மேற்கு வங்கத்தில் மதமாற்றம் செய்த 7 பேர் மீது வழக்கு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம், கிஷ்மத் மதன்பூரைச் சேர்ந்தவர் புட்டு மண்டல். இவரது தம்பி கவுரங் மண்டல். இருவரும் அக்காள், தங்கையான பார்வதி, கலாவதி ஆகியோரை திருமணம் செய்துள்ளனர்.

புட்டு, கவுரங் ஆகியோர் கடந்த 2021 நவம்பர் 24-ம் தேதி காணாமல் போயினர். இதுதொடர்பாக இருவரின் மனைவிகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் இருவரும் முஸ்லிம்களாக மதம் மாறியது தெரியவந்தது. இதுதொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருவரின் மனைவிகளும் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது. இதன்படி சிபிஐ விசாரணை நடத்தி, இருவரையும் கட்டாய மதமாற்றம் செய்த 7 பேர் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x