Published : 07 Jan 2024 05:38 AM
Last Updated : 07 Jan 2024 05:38 AM

முதன்முறையாக ட்ரோன்கள் மூலம் மார்ச், ஏப்ரலில் வரையாடுகள் கணக்கெடுப்பு

சென்னை: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாக்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்.12-ம் தேதிநீலகிரி வரையாடுகள் திட்டத்தை அறிவித்திருந்தார். நீலகிரிவரையாடுகளை கணக்கெடுத்து, அவற்றின் எண்ணிக்கையை கண்டறிவது முக்கிய நோக்கமாகும். வால்பாறை, ஆனைமலைபுலிகள் காப்பகம் பகுதிகளில் கணக்கெடுப்பு நடக்கும்.

நீலகிரி வரையாடுகள் திட்ட இயக்குநர் எம்.ஜி.கணேசன் தலைமையில் 25 ஆய்வாளர்கள் மற்றும் களஅலுவலர்கள் 3 நாட்களுக்கு ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் கிடைக்கும் 5 வகையான முறைகளில் ஒன்றை தேர்வு செய்து, வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முறையான வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பில் முதல்முறையாக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x