Published : 13 Oct 2023 04:04 AM
Last Updated : 13 Oct 2023 04:04 AM

கடலூர் சிப்காட்டில் ரசாயன குழாய் வெடித்து கரும்புகை ‌வெளியேறியது

சிப்காட் தொழிற்சாலையில் வெளியேறிய கரும் புகை.

கடலூர்: கடலூர் சிப்காட்டில் ‘டாக்ரோஸ்’ என்ற தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை உரங்களை உற்பத்தி செய்து வருகிறது.

இங்கு செயல்படுத்தாமல் வைத்திருந்த ஒரு பிளான்டை இயக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நேற்று இரவு அந்த பிளான்ட் பரிசோதனை முயற்சியாக இயக்கப்பட்டது. அப்போது அதில் இருந்த ரசாயன குழாய் வெடித்துள்ளது.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்பு புகையுடன் துர்நாற்றம் வீசியது. இதைக் கண்டு சுற்று வட்டார மக்கள் பதற்றம் அடைந்தனர். போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் அந்த தொழிற்சாலைக்கு விரைந்து வந்தனர்.

தொழிற்சாலை உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x