Published : 26 Mar 2019 06:23 AM
Last Updated : 26 Mar 2019 06:23 AM

வாக்குறுதியை நிறைவேற்றாவிடில் காலணியால் அடிக்க சுயேச்சை பிரச்சாரம்

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் என்னை காலணியால் அடியுங்கள் என நிஜாமாபாத் நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் நூதன பிரச்சாரம் செய்து வருகிறார்.

தெலங்கானா மாநிலம், ஜெகத்தியாலா மாவட்டம், மெட்பள்ளியை சேர்ந்தவர் ஆகுல அனுமந்து. இவர் நேற்று நிஜாமாபாத் நாடாளுமன்ற தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளராக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அந்த பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:பல்வேறு கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொரு முறையும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு பின்னர் அவைகளை மறந்து விடுகின்றனர். இது குறித்து அவர்கள் ஆலோசிப்பது கூட இல்லை. ஆனால், நான் அதுபோன்று மறக்க மாட்டேன். வாக்குறுதிகளை நான் மறந்தால் என்னை இத்தொகுதி மக்கள் தங்களது காலணியால் அடிக்கலாம். நானும் உடனடியாக என் பதவியை ராஜினாமா செய்து விடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

அவரது நூதன பிரச்சாரம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x