Published : 12 Jul 2022 04:59 AM
Last Updated : 12 Jul 2022 04:59 AM

‘இந்து தமிழ் திசை’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் - சர்வதேச மக்கள் தொகை தினத்தையொட்டி நடக்கிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ சார்பில் பள்ளி மாணவர்களுக்காக வெளிவரும் ‘வெற்றிக்கொடி’யில் மாணவ-மாணவிகளின் தனித்திறன்களை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சர்வதேச மக்கள் தொகை தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை ‘வெற்றிக் கொடி’ நடத்துகிறது.

இப்போட்டியில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். ‘உலக மக்கள் தொகையில் இந்திய மக்கள் தொகையின் பங்கு’ எனும் தலைப்பில் 150 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரையை எழுதி, மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி அடையாள அட்டை எண் ஆகியவற்றுடன் chnVK_contest@hindutamil.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 15) அனுப்ப வேண்டும். சிறந்த கட்டுரையாகத் தேர்வு செய்யப்படும் 3 வெற்றியாளர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கும் பரிசு காத்திருக்கிறது. வெற்றி பெற்றவர்களின் விவரம், அடுத்த வார போட்டிக் கேள்வியுடன் வெளியாகும்.

போட்டி எண் - 1, வாரம் 1-ல் பரிசு பெறும் பள்ளிகள்: 1.அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, மல்லல், சிவகங்கை மாவட்டம்,2. அரசு நடுநிலைப்பள்ளி, மணப்பேட்டை, புதுச்சேரி, 3. சென்னை உயர்நிலைப் பள்ளி, இருசப்பா தெரு, திருவல்லிக்கேணி, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x