Last Updated : 12 Mar, 2025 08:51 PM

 

Published : 12 Mar 2025 08:51 PM
Last Updated : 12 Mar 2025 08:51 PM

1 முதல் 9-ம் வகுப்பு வரை ஏப்.8-ல் முழு ஆண்டுத் தேர்வு தொடக்கம் - அட்டவணை வெளியீடு

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 8-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 9-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், 1 முதல் 9-ம் வகுப்புக்கு திருத்தப்பட்ட விரிவான தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று (மார்ச் 12) வெளியிட்டது. அதன்படி 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ஏப்ரல் 8 முதல் 24-ம் தேதிவரை நடைபெறவுள்ளன. இதேபோல், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-ம் பருவத்தேர்வுகள் ஏப்ரல் 9-ல் தொடங்கி 21-ம் தேதி வரையும், 1, 2, 3-ம் வரை பயிலும் குழந்தைகளுக்கான இறுதி பருவத்தேர்வுகள் ஏப்ரல் 15-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் பாடவாரியாக தேர்வு நடைபெறும் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

இதுதவிர இந்த காலஅட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டுமென அனைத்துவித பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறையை பொருத்தவரை 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 22-ம் தேதி முதலும், 6 முதல் 9-ம் வகுப்புக்கு ஏப்ரல் 25-ம் தேதி முதலும் தொடங்கும. எனினும், ஆசிரியர்கள் பள்ளி இறுதி வேலைநாள் வரை பணிக்கு வரவேண்டும் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x