Last Updated : 19 Oct, 2024 08:13 PM

 

Published : 19 Oct 2024 08:13 PM
Last Updated : 19 Oct 2024 08:13 PM

அக்.28 முதல் நவ.2 வரை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி

கோப்புப் படம்

சென்னை: தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 28 முதல் நவம்பர் 2-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: “தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2-ம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் திட்ட பாடப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.

அதன்படி மாநில கருத்தாளர்களுக்கு அக்டோபர் 22, 23-ம் தேதிகளில் இணைய வழியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாவட்டக் கருத்தாளர்களுக்கு அக்டோபர் 24, 25-ம் தேதிகளில் நேரடியாக பயிற்சி வழங்கப்படும். தொடர்ந்து மாவட்டக் கருத்தாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியத்தில் அக்டோபர் 28, 29-ம் தேதிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், நவம்பர் 4, 5-ம் தேதிகளில் 4, 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப் பொருள் கற்பிப்பது சார்ந்து எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x